Wednesday 18 November 2015

தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழிகள் 


தமிழ் பழமொழிகள் - Tamil Proverbs

* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

* அகல உழுகிறதை விட ஆழ உழு.

* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

* அடக்கமே பெண்ணுக்கு அழகு.

* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

* அடாது செய்தவன் படாது படுவான்.

* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

* அழுத பிள்ளை பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்

* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன

* அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்

* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

* அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அற்ப அறிவு அல்லற் கிடம்

* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும்சொல்லுக்குறுதி.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.´

* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு..

* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.

* இல்லாது பிறாவது அள்ளாது குறையாத

* இளங்கன்று பயமறியாது

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இளமையிற்கல்வி கல்மேல் எழுத்து.

* இளமையில்சோம்பல் முதுமையில்வருத்தம்.

* இறங்கு பொழுதில் மருந்து குடி

* இறுகினால் களி , இளகினால் கூழ்.

* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

* உடல் உள்ள வரையில் கடல்கொள்ளாத கவலை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

* உண்ணாச்சொத்து மண்ணாய்ப்போகும்.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

* உலோபிக்கு இரட்டை செலவு.

* உளவு இல்லாமல் களவு இல்லை.

* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல,

* உள்ளது போகாது இல்லது வாராது.

* உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய..

* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* ஊசியைக் காந்தம் இழுக்கும் *உத்தமனைச்சிநேகம் இழுக்கும்.

* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப்பிந்துவான்.

* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

* எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

* எதார்த்தவாதி வெகுசன விரோதி.

* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

* எதை அடக்காவிட்டாலும் நாக்கைஅடக்கவேண்டும்.

* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

* எரிகிறதைப்பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எருமை வாங்கும் முன்னே நெய்க்குவிலை கூறாதே.

* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

* எலி வளையானாலும் தனிவலை வேண்டும்.

* எலும்புகடிக்கிற நாய் இரும்பைக்கடிக்குமா?

* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

* எள்ளூ என்கிறதற்குமுன்னே எண்ணெய்கொண்டு வருகிறான்.

* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான்முறை கொண்டாடும்.

* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத்தலைச்சுமை.

* ஏழை அமுதகண்ணீர் கூரியவாளை ஓக்கும்.

* ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

* ஐயர் வரும் அமாவாசை நிற்குமா?

* ஒரு காசுபேணின் இரு காசுதேறும்.

* ஒரு குடம்பாலுக்கு ஒரு துளிஉறை.

* ஒரு கைதட்டினால் ஓசைஎழும்புமா?

* ஒரு நன்றிசெய்தவரை உள்ள அளவும் நினை.

* ஒரு நாள்கூத்துக்கு மீசையைச்சிரைக்கவா?

* ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.

* ஒரு பொய்யைமறைக்க ஒன்பது பொய்சொல்லுதல்.

* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்குஅட்டமத்திலே சனி.

* ஓடுகிறவனைக்கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கடலைத்தாண்ட ஆசையுண்டு கால்வாயைத்தாண்டக்கால் இல்லை.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்

* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

* கடன் வாங்கிக்கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக்கைவிட்டனும் கெட்டான்.

* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

* கடுங்காற்று மழைகூட்டும் கடுஞ்சிநேகம் பகைகூட்டும்.

* கடுஞ்சொல் தயவைக்கெடுக்கும்.

* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

* கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

* கண் கண்டது கை செய்யும்.

* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

* கரணம் தப்பினால் மரணம்.

* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல

* கல்லாதவரே கண்ணில்லாதவர்.

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

* கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

* கள்ள மனம் துள்ளும்.

* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

* கனிந்த பழம் தானே விழும்.

* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

* காணி ஆசை கோடி கேடு.

* காப்பு சொல்லும் கை மெலிவை.

* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்

* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை

* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்

* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்

* காற்றில்லாமல் தூசி பறக்குமா?

* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

* கிட்டாதாயின் வெட்டென மற.

* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

* கீறி ஆற்றினால் புண் ஆறும்.

* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

* குணத்தை மாற்றக் குருவில்லை.

* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

* குப்பை உயரும் கோபுரம் தாழும்.

* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்:

* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

* குப்பையிற்கிடந்தாலும் குன்றிமணி நிறம்போகுமா?

* குரங்கின் கைப் பூமாலை.

* குரைக்கிற நாய் கடிக்காது.

* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது

* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. 

* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

* கெடுவான் கேடு நினைப்பான்

* கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

* கேடு வரும்பின்னே, மதி கெட்டுவரும்முன்னே.

* கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்

* கையிலே காசு வாயிலே தோசை

* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

* கொடிக்கு காய் கனமா?

* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

* சாண் ஏற முழம் சறுக்கிறது.

* சாது மிரண்டால் காடு கொள்ளாது.

* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

* சுக துக்கம் சுழல் சக்கரம்.

* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

* சுட்ட சட்டி அறியுமா சுவை.

* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

* செயவன திருந்தச் செய்.

* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

* சேற்றிலே செந்தாமரை போல.

* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

* சொல் அம்போ வில் அம்போ?

* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்..

* சொல்வல்லவனை வெல்லல் அரிது.

* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

* தனிமரம் தோப்பாகாது.

* தன் வினை தன்னைச் சுடும்.

* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

* தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

* தருமம் தலைகாக்கும்.

* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

* தலை இருக்க வால் ஆடலாமா ?

* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன

* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

* தவளை தன் வாயாற் கெடும்.

* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல். 

* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !

* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

* நயத்திலாகிறது பயத்திலாகாது.

* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா

* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

* நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.

* நாள் செய்வது நல்லார் செய்யார்.

* நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

* நித்திய கண்டம் பூரண ஆயிசு.

* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

* நித்திரை சுகம் அறியாது.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

* நிறைகுடம் தளம்பாது.

* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

* நீர் மேல் எழுத்து போல்.

* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

* நெருப்பு இல்லாமல் புகை எழும்புமா?

* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

* நொறுங்கத் தின்றால் நூறு வயது.

* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

* நோய் கொண்டார் பேய் கொண்டார்.

* பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

* பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

* பகைவர் உறவு புகை எழு நெருப்பு.

* பசியுள்ளவன் ருசி அறியான்.

* பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

* பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

* படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

* பணம் பத்தும் செய்யும்.

* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

* பதறாத காரியம் சிதறாது.

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

* பலநாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

* பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

* பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

* பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

* பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி

* புத்திமான் பலவான்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

* பெண் என்றால் பேயும் இரங்கும்..

* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

* பேராசை பெருநட்டம்.

* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

* பொறுமை கடலினும் பெரிது.

* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* போரோடுதின்கிற மாட்டுக்கு பிடுங்கி போட்டுக் கட்டுமா?

* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

* மண்டையுள்ள வரை சளி போகாது.

* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

* மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும்.

* மவுனம் கலக நாசம்

* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

* மனமுரண்டிற்கு மருந்தில்லை.

* மனம் உண்டானால் இடம் உண்டு.

* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

* மாரடித்த கூலி மடி மேலே.

* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

* முதல் கோணல் முற்றுங் கோணல்

* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

* முன் வைத்த காலைப்பின் வைக்கலாமா?

* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

* மைத்துணன் உதவி மலைபோல

* மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

* மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

* மொழி தப்பினவன் வழி தப்பினவன்

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

* வட்டி ஆசை முதலுக்கு கேடு.

* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.

* வேலிக்கு ஓணான் சாட்சி.

* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை?

* விதி எப்படியோ மதி அப்படி.

* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

* விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

* விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமா?

* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

* வைக்கோற் போர் நாய் போல.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.