Saturday 12 December 2015

NMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை
தேர்வுக்கு, 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி
பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2
முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை
 ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல்,
 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள்
பதிவேற்றம் செய்யலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.