Monday 4 January 2016

சிறுவர் பகுதி
விடுகதைகள்


சித்ரகலா செந்தில்குமார்


1. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல
பட்டை தீட்டியிருப்பான்; சாமியார் அல்ல - அவன் யார்?

2. கறுத்த ரோஜா மொட்டு, கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும், காத்திடும் பின் சாய்ந்திடும் - அது என்ன?

3. நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அவை எவை?

4. பார்த்தவர் இருவர், எடுத்தவர் ஐவர், உண்டவரோ ஒருவர் - அவர்கள் யார்?

5. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை - அவன் யார்?

6. ஊளையிட்டாலும் ஊரைச் சுமந்து செல்வான் - அவன் யார்?

7. கல்லிலே காய்க்கும் பூ;
காய்ந்தால் மலரும் பூ:
பூவிலே இது வெள்ளைப்பூ. - என்ன பூ?

8. எண்ணெய் இல்லை; திரியும் இல்லை
ஏற்றி வைக்க ஆளும் இல்லை
ஆனாலும் தெரியுது வெளிச்சம். - அது எது?

9. கருப்பு நிறமுடையவன்
கபடம் அதிகம் கொண்டவன்
கூவி அழைத்தால் வந்திடுவான்
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் - அவன் யார்?

10. அரிசி போல் பூ பூக்கும்.
அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?

விடைகள்:

1. அணில்

2. குடை

3. விக்கல், உப்புக்கல், கறுக்கல்.

4. கண்கள், விரல்கள், நாக்கு.

5. சிலந்தி

6. தொடருந்து

7. சுண்ணாம்பு

8. சூரியன்

9. காகம்

10. மிளகாய்