Sunday 29 May 2016

EMPLOYMENT NEWS

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் அதிகாரி பணியில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அது தொடர்பான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஏதேனும் ஒரு வணிக வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவசியம். இப்பணிக்கு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில்(www.unionbankofindia.co.in
)விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.